பக்கங்கள்

வரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஜனவரி, 2009

அப்பா அம்மா வீட்டில் இல்ல...

அப்பா அம்மா வீட்டில் இல்ல...
- பாட்டு உருவான கதை


ப்பா அம்மா ரெண்டு பேரும் கூட்டாளி சாவுக்குப் போயிட்டாங்க. போயிட்டு வர குறைஞ்சது ரெண்டு மூனு மணி நேரமாவது ஆகும். லில்லுக்கு வீட்டுல தனியா இருக்க ஒரே போர். என்ன பன்றதுன்னே தெரியல. நெட் முன்னுக்குப் போய் உட்கார்ந்தாள். யாரும் ஆன்லைன்ல இல்ல. மறுபடியும் கடுப்பு. திடீரென ஓர் இளிச்ச வாயன் ஆன்லைன்ல வந்தான். பேரு வில்லு. அவன் யாருன்னே சரியா ஞாபகம் இல்ல. சும்மா அவனுக்கு தண்ணி காட்ட ப்ளான் போட்டாள்.
பசங்க ஆவல தூண்டி வேடிக்கை பார்ப்பதே இந்த பொண்ணுங்க வேலை. ஹேட்போனை காதிலே மாட்டினாள், லில்லு வில்லுவை வாய்ஸ் கான்பிரன்சுக்கு கூப்பிட்டாள், பாவம் அவனும் சம்மதிச்சு வந்தான்...
அப்போ... அப்போ.. அப்போ... பாட்டாவே பேசிக்கிட்டாங்க...


முன்குறிப்பு : பச்சை நிற எழுத்துரு லில்லு பேசியது, நீல நிற எழுத்துரு வில்லு பேசியது. எஸ்ஜே சூர்யா மாதிரி நாங்க கலர்லயே கதைய சொல்லுவுவோம். அ... ஆ...

ஏய்... டேடி மம்மி வீட்டில் இல்ல
-அதனால என்னா? வீட்டுல மத்தவங்கல்லாம் இல்லையா? இல்ல மேல அனுப்பிட்டியா?
தடை போட யாரும் இல்ல
- அப்படியே போட்டுட்டாலும் நீங்க அடங்கி ஒடங்கி நடந்துப்பீங்கலாக்கும், மேல சொல்லு.
விளையாடுவோமா புள்ள வில்லாலா
- ஓ.. ஐயம் ரெடி..., என்ன விளையாட்டு?

ஏய்.. மைதானம் தேவையில்ல
- கம்பியூட்டர் கேமா?
அம்ப்பையரும் தேவையில்ல
- அது யாரு? உன் பழைய பாய்பிரண்டா?
யாருக்கும் தோல்வி இல்ல வில்லாலா
-அப்போ எதுக்கு விளையாடனுமாம்?

ஏய் கேளேண்டா மாமு,
-யக்கா சொல்லுக்கா
இது இன்னோரு கேமு
-இன்னும் ஒன்னுக்கூட ஆடல, அதுக்குள்ள இன்னொன்னா
தெரியாம நின்னா அது ரொம்ப ஷேமு
-தெரியாம வெள்ளாண்டா நீ ஏமாத்திடுவியே... அசுக்கு புசுக்கு
விளையாட்டு ரூலு, நீ மீறாட்டி ஃபூலு
-இப்போ எவன் ரூல் பிரகாரம் விளையாடுறான்? எல்லாத்திலயும் தான் அரசியல் இருக்கே...
எல்லைகள் தாண்டு அதுதாண்டா கோலு
-எது தாய்லாந்து எல்லையா, இல்ல சிங்கப்பூர் எல்லையா?

டேடி மம்மி, டேடி மம்மி
-எது, அதுக்குள்ள சாவுக்குப் போயிட்டு வந்திட்டாங்களா?
டேடி மம்மி வீட்டில் இல்ல
-ஓ... நல்ல வேளை... அப்புறம்
தடை போட யாரும் இல்ல
-இதையே எத்தன வாட்டி சொல்லுவ?
விளையாடுவோமா புள்ள வில்லாலா
-சரி வா, விளையாடாட்டி இதையேத்தான் கேட்டு கழுத்த அறுப்ப போல...

ஹ்ம்ம்... டேக்சிகாரன் தான் நான் ஏறும் போதெல்லாம்
அட மீட்டருக்கு மேல தந்து பல் இளிச்சானே
-சிரிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? பேச்ச கொற... பேச்ச கொற...

ஓஹோ பஸ்சில் ஏறித்தான் ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்து விட்டு ஓரம் நின்னானே

-அந்த சீட்டுத்தான் தாராளமா இருக்கும் உன் சைசுக்கு.

ஏய்... அளவான உடம்புக்காரி
-எது நானா?
ஏய்... அளவில்லா கொழுப்புக்காரி...
-ஏய்..!
ஏய்.. அளவான உடம்புக்காரி
-120 கிலோ இருப்பேன், பிரச்சனை இல்லியா?
அளவில்லா கொழுப்புக்காரி
- ரொம்ப புகழ்றீங்க

இருக்குது இருக்குது இருக்குது
வாடி உனக்கு ராத்திரி கச்சேரி
-கச்சேரியில நீ ஜால்றா போடுற கையிதானே?

டேடி மம்மி வீட்டில் இல்ல
தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா புள்ள வில்லாலா

-அது சரி, முதல்லேந்து புள்ளன்னு சொல்றியே, யார? என்னமோ போ... நீ தமிழ்லத்தான் பாடுறியான்னு டவுட்டு....

ஏய் வைரம் வியாபாரி என் பல்ல பார்த்தானே
-மாட்டுப் பல்லுன்னு விடைச்சானா?
தன் விற்கும் வைரம் போலி என்று தூக்கி போட்டானே
-அத பாக்கெட்ல போட்டுகிட்டு வந்தியா இல்லியா?

த.. த... த.. த... தங்கம் வியாபாரி என் அங்கம் பார்த்தானே
-தற்கொலை பண்ணி இருப்பானே அப்புறமா?
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழில விட்டானே
-நம்புற மாதிரி ஏதாச்சும் பேசுலா, ப்ளீஸ். அவன் மட்டம்ன்னு சொன்னது உன் அங்கமா இருக்கும்...

ஏய் அழகான சின்ன பாப்பு
ஆ... வைக்காதே எனக்கு ஆப்பு
ஏய் அழகான சின்ன பாப்பு
வைக்காதே எனக்கு ஆப்பு
-இப்படியே பேசிட்டு இரு, வெய்க்கிறேன்டா பெரியா ஆப்பு
கொத்தும் கொலையா இருக்குற உனக்கு
-ஐயயே... தோட்ட வேலை செய்யுறியா?
நான்தான்டி மாப்பு
-உன் விதியே, நான் என்னத்த செய்ய?

டேடி மம்மி, டேடேடி மம்மி
-நோடா செல்லம், டேடிய ‘டேய்’டேடின்னு சொல்லக் கூடாது

டேடி மம்மி வீட்டில் இல்ல
தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா புள்ள வில்லாலா

-ஹெலோ, ஹெலோ... ஆர் யூ டேர்? BUZZ... BUZZ... BUZZ...

லில்லுவின் ஐடி ஆப்லைன்னுக்கு மாறியது. வில்லு எல்லா பசங்கள போல புலம்பிக் கொண்டிருக்கிறான்.

அடிப்பாவி கடைசிவரை என்ன விளையாட்டுன்னு சொல்லவே இல்லையே?

இந்த பொண்ணுங்களே இப்படித்தான், குத்துங்க வில்லு குத்துங்க...
பின்குறிப்பு: மேலே பெரிய எழுத்துருவில் இருக்கும் வரிகள் - ஒரு தமிழ்ப்பாடல்.

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இசை ரகம்: அரை விறுவிறுப்பு, குறைந்த பட்சம் தலையை ஆட்டுவிக்கும்.
படம்: வில்லு
பெண்குரல்: திவ்யா
ஆண்குரல்: (தெரியலை)
பாட்டு எழுதியவர்: (தெரியலை)
கருத்துரை: பாட்டின் சரணங்களுக்கு இடையில் வரும் இசையில் கூடிய கவனம் செலுத்தி இருக்கலாம்.

புதன், 7 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு - விபரம்

1. பாடல்: ஆசை முகம் மறந்து போச்சே
எழுத்து: சுப்ரணமணியபாரதியார்

2. பாடல்: சின்ன மணி குயிலே
படம்: அம்மன் கோயில் கிழக்காலே

3. பாடல்: ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
படம்: ரோஜா

4. பாடல்: ஆலங்குயில் கூவும் ரயில்
படம்: பார்த்திபன் கனவு

5. பாடல்: பூப்போல தீப்போல மான்போல மழைப்போல
படம்: வசீகரா

6. பாடல்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
படம்: சத்தியம்

7. பாடல்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே
படம்: தாம் தூம்

8. பாடல்: அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
படம்: லேசா லேசா

9. பாடல்: என் அன்பே யாவும் நீயன்றி நானில்லை
படம்: சத்தியம்

10. பாடல்: உயிரே உயிரே உயிரின் உயிரே
படம்: காக்க காக்க

11. பாடல்: வெண்மதி வெண்மதியே நில்லு
படம்: மின்னலே


12. பாடல்: கருகரு விழிகளால் ஒரு கண் மை என்னைக் கடத்துதே
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்

13. பாடல்: உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
படம்: காதல் மன்னன்

14. பாடல்: தங்கத் தாமரை மகளே
படம்: மின்சாரக் கனவு


15. பாடல்: நறுமுகையே நறுமுகையே
படம்: இருவர்


16. பாடல்: ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம்
படம்: சமுராய்


17. பாடல்: வெள்ளைக்கார முத்தம் என் தேகம் எங்கும்
படம்: செல்லமே

18. பாடல்: தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை
படம்: ஆதி

19. பாடல்: மழையே மழையே நீரின் திரையே
படம்: ஜூன் ஆர்

20. பாடல்: மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
படம்: சமுராய்

21. பாடல்: உனக்கென இருப்பேன் உயிரைக் கொடுப்பேன்
படம்: காதல்

22. பாடல்: உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
படம்: கல்லூரி

23. பாடல்: விழிகளின் அருகினில் வானம்
படம்: அழகிய தீயே

24. பாடல்: கனவா இல்லை காற்றா
படம்: ரட்சகன்

25. பாடல்: நெஞ்சிக்குள் பெய்திடும் மாமழை
படம்: வாரணம் ஆயிரம்

26. பாடல்: எங்கிருந்து வந்தாயடா எனைப் பாடுபடுத்த
படம்: பைவ் ஸ்டார் (5*)

27. பாடல்: நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என் செய்வாயோ
படம்: லவ் பேர்ட்ஸ்

28. பாடல்: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
படம்: வாரணம் ஆயிரம்

29. பாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்
படம்: யாரடி நீ மோகினி

30. பாடல்: போகாதே போகாதே நீயிருந்தால் நானிருப்பேன்
படம்: தீபாவளி

31. பாடல்: என்னைக் காணவில்லையே நேற்றோடு
படம்: காதல் தேசம்

32. பாடல்: வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
படம்: யாரடி நீ மோகினி


33. பாடல்: எங்கே எனது கவிதை
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

34. பாடல்: தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
படம்: காதலில் விழுந்தேன்

35. பாடல்: அடதடி அப்பத்தா
படம்: சமுராய்

36. பாடல்: நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா
படம்: பொல்லாதவன்

37. பாடல்: ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த
படம்: சிந்து பைரவி

38. பாடல்: உயிரும் நீயே உடலும் நீயே
படம்: பவித்திரா

39. பாடல்: சின்ன தாயவள் தந்த ராசாவே
படம்: தளபதி

40. பாடல்: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்
படம்: பாண்டவர் பூமி

41. பாடல்: காதல் இல்லாமல் நாம் வாழ்வது வாழ்வா
படம்: தாளம்

42. பாடல்: யாரோ மனதிலே
படம்: தாம் தூம்

43. பாடல்: ஒரு மாலை இளவெயில் நேரம்
படம்: கஜனி

44. பாடல்: என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை
படம்: காதலன்

45. பாடல்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
படம்: சுப்பிரமணியபுரம்

46. பாடல்: யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
படம்: தொட்டி ஜெயா

47. பாடல்: காதல் நெருப்பின் நடனம்
படம்: வெய்யில்

48. பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
படம்: உயிரே

49. பாடல்: சரியா இது தவறா இந்த உணர்வினை விளக்கிட
படம்: கல்லூரி

50. பாடல்: ஓ... வெண்ணிலா இரு வானிலா
படம்: காதல் தேசம்

51. பாடல்: கலைமானே உன் தலை கோதவா
படம்: தாளம்

52. பாடல்: உனக்குள் நானே உருகும் இரவில்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்

53. பாடல்: சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
படம்: தீனா

54. பாடல்: ஆத்தங்கர மரமே அரச மரயிலையே
படம்: கிழக்கு சீமையிலே


55. பாடல்: நீ கட்டும் சேல மடிப்பிலே நான் கசங்கி போனேனே
படம்: புதிய மன்னர்கள்

56. பாடல்: ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
படம்: ஜெண்டில்மேன்

57. பாடல்: அன்பே அன்பே கொல்லாதே
படம்: ஜீன்ஸ்

58. பாடல்: சகலகலா டாக்டர் டாக்டர்
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

59. பாடல்: காலேஜிக்குப் போவோம் கட்டடிக்க மாட்டோம்
படம்: கோவில்

60. பாடல்: அவ சத்தியமா என்னைக் காதலிச்சா
படம்: அப்பா அம்மா செல்லம் (?)

61. பாடல்: அரபு நாடே அசந்து நிற்கும்
படம்: தொட்டால் பூ மலரும்

62. பாடல்: கன்னாலனே எனது கண்ணை
படம்: போம்பே

63. பாடல்: சிறு பார்வையாலே கொய்தாய்
படம்: பீமா

64. பாடல்: தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
படம்: என் சுவாசக் காற்றே

65. பாடல்: ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்
படம்: லேசா லேசா

66. பாடல்: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
படம்: மன்மதன்

67. பாடல்: இவன் யாரோ இவன் யாரோ
படம்: மின்னலே

68. பாடல்: நீயா பேசியது என்னன்பே நீயா பேசியது
படம்: திருமலை

69. பாடல்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
படம்: வாரணம் ஆயிரம்

70. பாடல்: வானத்தை விட்டுவிட்டு மேகங்கள் போவதென்ன
படம்: ராமன் தேடிய சீதை


71. பாடல்: தென்றலே தென்றலே மெல்ல நீ பேசு
படம்: காதல் தேசம்

72. பாடல்: மார்கழி திங்கள் அல்லவா
படம்: சங்கமம்

73. பாடல்: என் காதலே என் காதலே
படம்: டூயட்

74. பாடல்: குளிருதே குளிருதே இருவுயிர் குளிருதே
படம்: தாஜ்மகால்
.

75. பாடல்: தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
படம்: திமிரு


76. பாடல்: என்ன சத்தம் இந்த நேரம்
படம்: புன்னகை மன்னன்

77. பாடல்: இவன் தானா இவன் தா...னா
படம்: சாமி

78. பாடல்: பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
படம்: சத்தம் போடாதே

79. பாடல்: ஓ... மனமே ஓ... மனமே உள்ளிருந்து அழுவதென்ன
படம்: உள்ளம் கேட்குமே

80. பாடல்: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த
படம்: வண்டிசோலை சின்னராசு (?)

81. பாடல்: பனி விழும் மலர் வனம்
படம்: நினைவெல்லாம் நித்தியா (?)

82. பாடல்: கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
படம்: தவம்

83. பாடல்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
படம்: வெய்யில்

84. பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே
படம்: மின்சாரக் கனவு

85. பாடல்: கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
படம்: சச்சின்

86. பாடல்: இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
படம்: சித்திரம் பேசுதடி

87. பாடல்: காதல் என்பது கடவுள் அல்லவா
படம்: ஒரு கல்லூரியின் கதை

88. பாடல்: கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு
படம்: புதிய முகம்

89. பாடல்: மழை மழை என் இதயத்தில் அடிக்கின்ற முதல்மழை
படம்: உள்ளம் கேட்குமே

90. பாடல்: ஏன் பெண் என்று பிறந்தாய்
படம்: லவ் டுடேய்

91. பாடல்: ஒரு வெள்ளை புறா ஒன்று போனது
படம்: புது கவிதை

92. பாடல்: சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?
படம்: ரட்சகன்

93. பாடல்: நினைவுகள் நெஞ்சினில் புதைவதினால்
படம்: ஆட்டோகிராப்

94. பாடல்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
படம்: சங்கமம்

95. பாடல்: தையத்தா தையத்தா தைய தையத்தா
படம்: திருட்டு பயலே

96. பாடல்: வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்
படம்: மின்னலே

97. பாடல்: சிரிச்சி சிரிச்சி வந்தா சீனாத்தானா டோய்
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

98. பாடல்: வைகாசி நிலவே வைகாசி நிலவே
படம்: உன்னாலே உன்னாலே

99. பாடல்: நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
படம்: பணக்காரன்

100. பாடல்: பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்
படம்: சிந்து பைரவி

செவ்வாய், 6 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (81-100)

நினைவை எட்டிய முதல்நூறு (81-100)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

எஞ்சிய இருபது இன்று. நேற்றைய முந்தைய நாளின் தொடர்ச்சிதான்.

என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,
சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் பின்வருமாறு:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

81. இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

82. மனிதர்கள் உறங்கும் நேரத்தில் தேவதையாய் திரிந்தே நானுனைக் காதலிக்கிறேன்

83. ஓ... சாமி பார்த்தும் கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்கே

84. நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம், பாலூட்ட நிலவுண்டு

85. தெருமுனையைத் தாண்டும் வரையில் வெறும் நாள்தான் என்றிருந்தேன், தேவதையைப் பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்

86. என்னைப் போல எவரும் உன்னைக் காதலிக்க முடியாது, முடியுமென்றால் கூட அவனைக் காதலிக்க முடியாது

87. தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்

88. விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு

89. ஐய்யோடி நான் கல்லாவேன், உளியாக நீ வந்தால் கலையாவேன்


90. இரண்டில் ஒன்று சொல்லிவிடு இல்லை நீயே கொள்ளி இடு இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு

91. இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்

92. கருங்கல்லைப் போன்றவன் நான், கற்பூரமாய் ஆகிவிட்டேன்

93. சுவாசிக்கக் கூட முடிவில்லை, என்னை வாசிக்க மண்ணில் எவருமில்லை, என்னை எனக்கே பிடிக்கவில்லை

94. அந்த மோதிரம் ஒட்டியானமாய் ஆகும் முன்னமே அன்பே அழைத்தேன்... என் காற்றில் சுவாசமில்லை, அது கிடக்கட்டும் இது உனக்கென்ன ஆச்சு?


95. உன்னைப் போன்ற அன்பாளன் யார்க்கு வாய்க்கும் மீண்டும், உடலை உடலால் குளிப்பாட்டவா

96. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்

97. ஓடும் தண்ணியில பாசி இல்லையே உணர்ச்சி கொட்டிப்புட்டா நோயும் இல்லையே

98. மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்து தீராதம்மா

99. பொருத்தம் இல்லாட்டி வருத்தந்தான் தோணும், அமைஞ்சா அதுபோல கல்யாணம் பண்ணு, இல்ல நீ வாழு தனியாளா நின்னு

100. சேரிக்கும் சேர வேணும், அதுக்கும் பாட்டுபடி... எண்ணியே பாரு, எத்தன பேரு, தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு


... இப்படி இன்னும் போய்க்கிட்டே இருக்கும் பட்டியல், அதனால இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன் :)

நாளைய பதிவு – நினைவை எட்டிய முதல்நூறின் விபரம்.

சனி, 3 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (61-80)


நினைவை எட்டிய முதல்நூறு (61-80)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

பெரும்பாலான சினிமா பாடல்கள் அரைத்த மாவையே அரைத்தாலும், ஒரு சில நேரங்களில் அவற்றில் ஏதாவது ஒன்று நம் கவனத்தை ஈர்க்கத்தான் செய்கின்றன. நாமும் அதை முணுமுணுப்பதில் ஓர் இன்பத்தைக் காண்கிறோம்.

அவ்வண்ணம் நான் களித்தவற்றில் நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் இங்கே (நேற்றைய தொடர்ச்சிதான்):

முன்குறிப்பு:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

61. கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும் இருக்கு உனக்கு மேலே...
62. உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
63. நீ தூரப்பச்சை, என் நெடுநாள் இச்சை
64. விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே, கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
65. என்ன நான் கேட்பேன் தெரியாதா? இன்னமும் என் மனம் புரியாதா?
66. பூவின் முகவரி காற்று அறியுமே, என்னை உன் மனம் அறியாதா?
67. நானுன்னைக் காணத்தானா யுகம் தோறும் காத்து கிடந்தேனா
68. உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை
69. துணியால் கண்ணையும் கட்டி, கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறேன் அவள, தனியா எங்கே போனாளோ!
70. என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன...
71. இரவில் காயும் முழுநிலா, எனக்கு மட்டும் சுடும் நிலா...
72. ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்?
73. அமுதென்பதா விஷம் என்பதா இல்லை அமுத விஷமென்பதா
74. அடி பூகம்ப வேளையிலும் இரு வான்கோழி கலவி கொள்ளும்... அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும் சுற்றி நின்றாடும் தீ வண்ணம் அணைவது திண்ணம்.
75. தள்ளி தள்ளி நிற்க நான் மழைத் தூறல் இல்லையே, கஷ்டப்பட்டு கற்க நான் கல்லூரி இல்லையே
76. கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ, தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்க்காதோ
77. அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே, வெட்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே
78. முடிவென்பதே ஆரம்பமே, வலைவில்லாமல் வழி கிடையாதே
79. தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி, வெற்றிக்கு அதுவே ஏணியடி
80. பழமை வேறு பழசு வேறு, வேறுபாட்டை தெரிஞ்சிக்கனும்
(எஞ்சியவை இருபது)

வெள்ளி, 2 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (41-60)


நினைவை எட்டிய முதல்நூறு (41-60)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

பாட்டு, இசை நாம் பிறந்தது தொட்டு கூடவே பயணிக்கும் ஒரு சொத்து. தமிழை மூன்று வகையாகப் பிரித்த போது கூட இசைக்கு ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இசையில் மூழ்கும்போது நாம் நம்மை மறந்து போகின்ற தருணங்களும் உள்ளன. இசையைக் கொண்டு மருத்துவம் கூட செய்யப்படுகிறது.

இதெல்லாம் ஏன் திடீரென சொல்லிக்கிட்டு இருக்கேன்னு கேட்கலாம் நீங்க. போன ரெண்டு நாளா எனக்குப் புடிச்ச பாட்டு வரிய போட்டுக்கிட்டு வரேன், அதோட தொடர்ச்சிதான் இன்னிக்கும்.

உடனே ஞாபகத்துக்கு வந்த முதல் நூறு தமிழ்ப்பாட்டு வரிகள் கீழே:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
41. கடவுள் இருப்பது தூரமடா, உன் காதல் இருப்பது அண்மையடா... நீ கடவுளை அடைவது சாத்தியமா, இல்லை காதலை அடைவது சாத்தியமா?

42. காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ, மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ!

43. தலை சாய்த்து பார்த்தாயே, தடுமாறி போனேனே...

44. வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி... ~~~ நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி

45. உனையன்றி வேறொரு நினைவில்லை, இனி இந்த ஊனுயிர் எனதில்லை, தடையில்லை சாவிலுமே உன்னோடு வர...

46. என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே, இள வேனில் காற்றின் வெப்பம் தாக்க நின்றேனே

47. சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும், புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்

48. கடல் மீதொரு துளி வீழ்ந்ததே, அதைத் தேடி தேடி பார்த்தேன்

49. கடலுக்கு மேல் ஒரு மழைத்துளி வந்து விழுந்ததே, உப்பென மாறுமா... இல்லை முத்தென மாறுமா? ~~~ தடுப்பதைப் போல நடித்திடும்போதும் தத்தித்தாவி கண்கள் ஓடும், அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையைத் தாண்டி உள்ளம் கேட்கும் இது சரியா....

50. தருகின்ற பொருளாய் காதல் இல்லை, தந்தாலே காதல் - காதல் இல்லை

51. நீ என்னைப் பிரிந்ததாய் யார் சொன்னது? என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது...

52. இனியொரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா, அதுவரை என்னைக் காற்றோடு சேர்த்திடவா

53. காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம், நரகம் சுகம் அல்லவா?

54. மாமன் பொண்ணே மச்சம் பாத்து நாளாச்சு, உன் மச்சானுக்கு மயிலப்பசுவு தோதாச்சு

55. அடி சூடான மழையே உடம்பு நனைஞ்சிக்கலாமா? கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா?

56. விடவேண்டும் அச்சத்தை, தொட வேண்டும் உச்சத்தை, அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை

57. அன்பே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி, சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி

58. யாரோ பெறுவார் பிள்ளை, இவரு தருவார் ‘பில்’-லை

59. உப்பு கடல வாங்கி தின்போம், தப்பா கடல போட மாட்டோம்

60. அவ தங்கச்சி பாப்பாக்கு முட்டாயி வாங்கியே தந்தேனே, முட்டாய் வாங்கி தந்தேனே, மாமு முட்டாளா ஆனேனே...

(எஞ்சியவை பின்னாளில்)

வியாழன், 1 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (21-40)


நினைவை எட்டிய முதல்நூறு (21-40)

- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு


பாடல் அல்லது இசை கேட்பதே ஓர் அலாதி இன்பம்தான், இல்லையா? ஒரு சிலர் இசை கேட்பதையே ஒரு பொழுது போக்காய் வைத்துள்ளனர்.


வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது நண்பரின் கைப்பேசியிலோ ஒலித்த இசையை உள்வாங்குகிறோம், பின் நம்மை அறியாமலே அதை முணுமுணுக்க செய்கிறோம்.

ஒரு முழுப்பாடலில், ஏதோ ஒரு கட்டத்தை நாம் ஆழமாக ரசித்து விடுகிறோம். அதற்கு காரணம், அந்த குறிப்பிட்ட வரியின் மொழியாளுமையா? இசையின் கவர்ச்சியா? பாடகரின் குரல் ஈர்ப்பா? அல்லது காட்சியின் வசீகரமா? எதுவாயினும் அவ்வரிகளில் நாம் வீழ்ந்ததை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்?

அவ்வண்ணம் என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,

சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் இதோ:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21. நான் என்றால் நானில்லை நீதானே நானாயானேன், நீ அழுதால் நான் துடிப்பேன்

22. உந்தன் பார்வை எந்தன் மீது விழ ஏதோ நானும் காத்திருந்தேன், வெளியே சொன்னால் ரகசியமா? என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே!

23. விழிகளின் அருகினில் வானம், வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம்... இது முதல் முதல் அனுபவமோ?

24. உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரும் தூரம் தெரியாது, உன்னில் வந்தொரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது.

25. சட்டென்று மாறுது வானிலை, பெண்ணே உன் மேல் பிழை

26. சுட்டு விரலாய் நீயும் கட்டை விரலாய் நானும் எழுதும் எதுவும் கவிதையாக மாறும்

27. என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும் உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.

28. வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி...

29. வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு இந்த நிமிடம் மீண்டும் பிறந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...

30. நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு, உனக்காகக் காத்திருப்பேன், உயிரோடு பார்த்திருப்பேன்...

31. மெய்யாக நீ என்னை விரும்பாதப் போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்... நிஜம் உந்தன் காதல் என்றால்!

32. கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்... கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன், உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே

33. பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய், நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

34. இறுதிச் சடங்கில் மிதிகள்படும் பூவைப் போல் கசங்கிவிட்டேன்

35. தாத்தா ஓட்டிய குதிரை இன்று வேலைக்காகாது

36. விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது, விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி துலையாது...

37. இன்னுங் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து, மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து...

38. சாமி தவித்தான், தாயைப் படைத்தான் உன் காலடி மட்டும் தருவாய் தாயே, சொர்க்கம் என்பது பொய்யே

39. தாயழுதாளே நீ வர, நீயழுதாயே தாய் வர

40. நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

(எஞ்சியவை பின்னாளில்)

புதன், 31 டிசம்பர், 2008

நினைவை எட்டிய முதற்நூறு (1-20)


நினைவை எட்டிய முதற்நூறு (1-20)

- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

ரு நாளில் நாம் எத்தனையோ பாடல்களைச் செவியினூடே கேட்கிறோம், ஒரு சில பாடல்கள்தாம் நம்மைக் கவர்கின்றன, ஈர்க்கின்றன;
அப்படி ஈர்ப்பவையில் குறிப்பிட்ட ஓரிரு வரிகளில் நாம் விழுந்துவிடுவதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அவ்வண்ணம் என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,
சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் பின்வருமாறு:
முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?
முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில் நினைவு முகம் மறக்கலாமோ?
2. உன் சேல காத்திலாட, என் நெஞ்சும் சேந்தாட
3. உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது... இது கம்பன்
பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது...
4. காதல்?... கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ஹூம்ம்ம் ம்ம்ம்... ம்ம்ம்?... நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவல்லோ...
5. அந்த நிலவை எடுத்து கவரி வீசவா, எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா...
6. சகாயமே உன்னருகினில் நிலைப்பெறுவேனே, தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே...
7. அடிவானம் சிவந்தாலும் குடிப்பூக்கள் பிளந்தாலும் உனைப் போல இருக்காது அழகே
8. அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
9. யாவும் நீயாய் மாறிப் போக நானும் நானில்லையே... மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே... தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்...!
10. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும், விலகிப் போகாதே தொலைந்துப் போவேனே நான்....!
11. என்ன இருந்தப் போதும் அவள் எனதில்லையே... மறந்துப்போ என் மனமே!
12. மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே... மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ...
13. மரபு வேலிக்குள் நீ இருக்க, மறக்க நினைக்கிறேன் முடியவில்லை!!!
14. நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை, நெருக்கமே காதல் பாஷை
15. மங்கை மான் விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன?
16. பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன், கேளாமால் போன பாடலை எல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன்...
17. இழப்பதை இங்கே இன்பம் என்று கொண்டேன், நஷ்டங்களே லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன் சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான், லயித்து கிடந்தேன் லட்சியத்தை முடித்தான்
18. அழகிய துளி, அதிசய துளி தொட தொட பரவசமே
19. நதியும் குளிக்கின்றதே, நனைய வா என்றதே, பார்த்த இன்பம் பாதி, இன்பம் நனைவேன் நானே
20. வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனித்துளி ஆவேனோ
(எஞ்சியவை பின்னாளில்)