பக்கங்கள்

புதன், 3 அக்டோபர், 2012

மிகப் பிடித்த

ரோஜா செடி

நிறைய பூக்கள்

ஒவ்வொன்றாய் பறிக்க

ஒரு முறை மட்டும் முள் குத்தியது

 அந்த செடிக்கு அது மிகப் பிடித்த ரோஜா போல...



செவ்வாய், 2 அக்டோபர், 2012

200 வெள்ளியில் அரசியல் சுருக்கு

 மலேசிய 2013க்கான வரவு செலவு திட்டத்தில் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

21 வயது முதல் 30 வயது வரைக்கான இளைஞர்கள் விவேக தொலைபேசி வாங்குவதற்கு அரசு 200 வெள்ளி உதவி தொகை நீட்டவுள்ளது.

மாத வருமானம் 3000க்குக் கீழ் இருக்க வேண்டும்.
3G விரிவலை வசதி இருத்தல் வேண்டும் போன்றவை இதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்.

இன்னும் சில மாதங்களில் இது அமலுக்கு வரும். அப்போது அதன் ஏனைய விதிமுறைகளும் வழிமுறைகளும் தெரிவிக்கப்படும்.

அதுவரை இதே அரசாங்கம்  நிலைக்குமா? என்பது கேள்வி...

கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம்...

200 வெள்ளிக்குத் தகுதி பெற 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். வாக்களிக்க தகுதி பெறுவதற்கும் அதே 21 வயதுதான்... இல்லே?







செவ்வாய், 15 மார்ச், 2011

தித்திக்கும் உப்பு

*தித்திக்கும் உப்பு*

ஒரு வியக்கத்தகு காதல் கதை

(மொழி பெயர்ப்பு கதை)


அவன் அவளை ஒரு விருந்து நிகழ்ச்சியில் கண்டான். அவள் தேவதை போல இருந்தாள், நிறைய பேர் அவளை மொய்த்துக் கொண்டனர், இப்படியிருக்க அவன் ரொம்பவே சாதாரணமாய் இருந்தான், யாரும் கண்டுகொள்ளவில்லை.


விருந்து முடிய, அவன் அவளைக் கொட்டைநீர் பானம் அருந்த அழைத்தான், அவள் மிரண்டுப் பார்த்தாள், ஆயினும் அவனது அடக்கமான தொணி அவளைச் சம்மதிக்க வைத்தது. ஒரு கடையில் அமர்ந்தனர், பானம் வந்தது. அவளுக்கு சொல்ல முடியா நடுக்கம், சீக்கிரம் வீட்டுப் போனால் போதும் என்றிருந்தது... அவனுக்கு அதிகபட்ச பதற்றம், திடீரென கடை ஊழியனை நிறுத்தினான். "னக்கு கொஞ்சம்... கொஞ்சம் உப்பு கிடைக்குமா, எனது பானத்தில் சேர்த்துக் கொள்ள." அங்கிருந்த அனைவரும் அவனை ஒரு விதமாக பார்த்தனர், என்ன விந்தையானவன்! சிவந்தது அவன் முகம், ஆனால் வந்த உப்பை, கொட்டைநீர் பானத்தில் கொட்டி கலக்கி குடிக்கலானான்.




அவள் ஆர்வமாகக் கெட்டாள், "எப்படி உங்களுக்கு இந்த பழக்கம்?" அவன் சொன்னான்: "நான் சின்ன வயசுல கடல் ஓரமாத்தான் வாழ்ந்து வந்தேன், கடல்லத்தான் வெள்ளாடுவேன், கடலோட சுவையே சுவை, ம்ம்ம்... இந்த கரிக்கும் கொட்டைநீர் பானம் போலவே... எப்போவெல்லாம் இந்த கரிக்கும் பானத்தைக் குடிக்கிறேனோ, அப்போவெல்லாம் எனது இளமைப் பருவத்த நினைச்சிப்பேன், என்னுடைய ஊரு ஞாபகம் வந்திடும், ரொம்பவே அத நினைச்சி ஏங்குறேன், அங்கு இன்னும் வசிக்கிற என் அப்பா அம்மா ஏக்கம் வந்திடும். சொல்லும்போதே அவன் கண்கள் கசிந்தன. அவள் உணர்ச்சி வசமானாள். அது அவனது உண்மை உணர்வுகள், அடிமனத்தின் வெளிப்பாடு. எந்த ஓர் ஆண் குடும்பபலவீனம் பூண்டிருக்கிறானோ, அவனே குடும்பத்தை நன்கு நேசிப்பவனாகவும், குடும்ப பொறுப்பு உள்ளவனாகவும் இருப்பான். பிறகு, அவளும் பேசத் தொடங்கினாள், அவளது சொந்த ஊர், அவளது சிறார் பருவம், குடும்பம் என. அரட்டை நீண்டது, மேலும் அவர்கள் கதைக்கு, அது நல்ல துவக்கமும் கூட.


அவர்கள் தொடர்ந்துச் சந்தித்தனர் அவ்வப்போது. அவனை அவள் தனது கோரிக்கைகளுக்கு உட்பட்டவனாய் பார்த்தாள்; விட்டுக் கொடுப்பவன், தூய மனம், இதமானவன், எச்சரிக்கையானவன். மொத்ததில் ஒரு குணாளன், அவனிடம் தன் மனதைப் பறிக்கொடுத்தாள்!


அந்த கரிக்கும் கொட்டைநீருக்கு நன்றிகள் பல!


பின், எல்லா காதல் கதையிலும் வருவதைப் போலவே, அந்த இளவரசன் இளவரசியைச் செவ்வனே கரம் பிடித்தான், இல்லற வாழ்வை இனிதே நடத்தினர். வேடிக்கை என்ன தெரியுமா? ஒவ்வொரு முறையும் அவள் கொட்டைநீர் தயாரிக்கும் போது, அவனது கோப்பையில் மட்டும் சீனிக்குப் பதில் உப்புதான், அவனுக்கு அப்படித்தான் பிடிக்குமென்று.


நாற்பது வருட தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிறகு அவன் இயற்கை எய்தினான், ஒரு கடிதத்தை அவளுக்கு எழுதி வைத்துவிட்டு: "என் ஆருயிரே, என்னை மன்னித்துவிடு, என் வாழ்நாள் பொய்யை மன்னித்துவிடு, இதுதான் நான் உன்னிடம் சொன்ன ஒரே பொய் கரிக்கும் கொட்டைபானம்... நமது முதல் சந்திப்பு.... ஞாபகம் வருகிறதா? நான் அத்தருணம் பதற்றத்தோடு இருந்தேன், உண்மையில் சக்கரையைக் கேட்பதற்குப் பதிலாகத்தான் உப்பு என்று உளறித் தொலைத்தேன், அந்த சொதப்பலே நமது உரையாடலை வலுப்படுத்தும் என நான் அப்போது நினைக்கவில்லை.. பின்னாட்களில், எத்தனையோ முறை சொல்ல நினைத்தும், அச்சம் என்னை மிரட்டியது, எதற்காகவும் உன்னிடம் பொய் சொல்லமாட்டேன் என நான் கொடுத்த வாக்கு!



நான் இப்போழுது மரணப்படுக்கையில், இப்பொழுதும் இதைச் சொல்லாவிட்டால்...! எனக்கு கரிக்கும் பானமே பிடிக்காது, என்ன கொடுமையான சுவை... முன்னாளில் இதுபோன்ற கரிக்கும் பானத்தை நான் நாக்கில் வைத்ததேயில்லை. உன்னைப் பார்த்தப் பின்பு, உனக்காக செய்த எதற்கும் நான் வருந்தியதில்லை. உன்னை அடைந்ததே என் வாழ்நாளின் எல்லையில்லா மகிழ்ச்சி. இன்னொரு பிறவி இருந்தால், உன்னை நான் மீண்டும் பார்க்க வேண்டும், வாழ்க்கை முழுதும் உன்னோடே வேண்டும், உனக்காக மீண்டும் கரிக்கும் கொட்டைநீர் பானம் அருந்துவதாயினும் இன்பமாக ஏற்பேன்."


அவள் கண்கள் கனத்தன, கடிதம் ஈரமானது.


நாட்கள் உருண்டோடின.


பின்னாளில் யாரோ ஒருவர் அவளிடம் வேடிக்கையாய் கேட்டு வைத்தார்: "உப்பு போட்டு தண்ணீர் கலக்கினா எப்படி இருக்கும்...?"


அவள் தன்னிலை மறந்து சொன்னாள்: "அது தித்திக்கும்"

வியாழன், 2 செப்டம்பர், 2010

வேண்டும்

தட்டையான உலகம் வேண்டும்,

காற்றைத் தின்று பசி தீர வேண்டும்,

கண்கள் மூடாது உறக்கம் வேண்டும்,

நினைத்ததும் மறந்திட வேண்டும்...

செவ்வாய், 18 மே, 2010

கொடுத்தால்தான் என்ன?


கொடுத்தால்தான் என்ன?


தலையில் நீ கொட்டுவதால்
நான் ஒன்றும் கெட்டு போவதில்லை...

கொட்டிய இடத்தில் முத்தம் வைப்பதால்
நீ ஒன்றும் கெட்டு போவதில்லை

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

வண்ணாரஸ் பட்டு கட்டி

வண்ணாரஸ் பட்டு கட்டி


டைலாமோ டைலாமோ, நாக்க மூக்க, மச்ச மக தந்நவாக (ஆத்திச்சூடி) போன்ற புரியாத வார்த்தைகளைத் தன் பாடல்களுக்கு மையமாகக் கொண்டு இசையினூடே அதைப் பிரபலபடுத்த தெரிந்தவர் விஜய் அந்தோணி. அண்மையில் திரையேறி பரபரப்பாக இயங்கும் பாடல்களில் ஒன்று விஜய் அந்தோணியின் “மேரே பியா”. ஏதோ இந்தி சொல் மாதிரி இருக்கேன்னு இந்தி தெரிந்த நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்னாரு – “என் அன்பே” என்று.

விருவிருப்பான பாட்டு. கேட்கும் போதே கை கால்களை ஆட்டத் தோனும் வகை.




இசை, வரிகள் முக்கியம் என்றாலும் இந்த பாட்டுக்குக் கண்டிப்பாக பாடகரின் குரல், தொணி இரண்டும் பிரதான பலம்.

நான் கேட்டு எனக்கு இனித்த பாடல், உங்களுக்கும் இனிக்கும் என்ற எண்ணத்தில் இதோ!

(இதுவரை கேட்டிராதவர்களுக்காக மட்டும்)

நினைத்தாலே இனிக்கும் ~ விஜய் அந்தோணி



யூ நோ லேடிஸ், இட் ஸ்டார்ட் தி ஷோ ஒப் ரியல் லவ்.. மேரே பியா! எஹா
(You know ladies, it starts the show of real love… merre piya! Eh ha)
பும்பா அலக்கடி பும்பா... பும்பா அலக்கடி பும்பா

வண்ணாரஸ் பட்டு கட்டி மல்லிப்பூ கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா

அவ முந்தான பூவ கண்டு என் உயிரு புட்டுக்கிச்சு
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா

மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா

வண்ணாரஸ் பட்டு கட்டி - பட்டு கட்டி
மல்லிப்பூ கொண்டை வெச்சி - கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா

சோ... ஃபோ சக்குரியா
சீ... ஃபோ லக்குரியா
சொல்லு, குத்த வெச்சி குத்திக்கவா சொல்லுடி என் லதா... வனிதா... தா....தாதாதாதாதா

உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் down down
hock down hock down hock down hock down


உன்னுடைய பேச்சினிலே ringtoneகள் down down
hock down hock down hock down hock down


உன் விழியின் போதையிலே டாஸ்மார்க்கே down down
hock down hock down hock down hock down


மயிலே உன் மாராப்பில் மல்கோவா down down
hock down hock down hock down hock...


மேரே பியா - பிரியா
மேரே பியா பியா ஹோ
மேரே பியா - freeயா
மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா

வண்ணாரஸ் பட்டு கட்டி - பட்டு கட்டி
அல்லிப்பூ கொண்டை வெச்சி - கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா

பளபளக்குது உன் மேனி கண்ணாடி down down
hock down hock down hock down hock down


ராத்திரி நீ கண் முழிச்சா நட்சத்திரம் down down
hock down hock down hock down hock down


பக்கத்துல நீ வந்தா pulse rateடு down down
hock down hock down hock down hock down


ஒன்ன பாத்த நாள் முதலா full mealsசு down down
hock down hock down hock down hock...

மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா

வண்ணாரஸ் பட்டு கட்டி - பட்டு கட்டி
அல்லிப்பூ கொண்டை வெச்சி - கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா




படம் சன் பிக்ச்சர் வெளியீடு. விளம்பரம் செய்ய தெரிந்த மிகச் சிறந்த நிறுவனம். அதை நிரூபிக்கும் வண்ணம் சன் மியூசிக்கில் தனது சேட்டையை இம்முறையும் காட்ட மறக்கவில்லை. அடிக்கடி இந்த பாட்டை ஒளிபரப்புவதும், அதைப் பாதியிலேயே நிறுத்தி மக்களின் ஆவலைத் தூண்டுவதுமாய்.



பாட்டு வரிய கேட்கும்போது, “நான் சிரித்தால் தீபாவளி” வகையில் சிவப்பு விளக்கு, ஜிகு ஜிகு பியூட்டிகள் என காட்சி அமைப்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இல்லை. இசையில் இருந்த வேகம் விருவிருப்பு நெருப்பு - எதிர் பார்த்த அளவுக்கு நடனத்துல இல்ல. பிருத்துவியும் ப்ரியாமணியும் ஆடுறாங்க. அவங்கள குத்தம் சொல்லி குத்திக்க முடியாது. அவங்களால முடிஞ்சத ஆடி இருக்காங்க. அதனால பாவம், காமிராவும் எடிட்டிங்கும் கூட சேர்ந்து நடனம் ஆட வேண்டியதாச்சு.

ஞாயிறு, 24 மே, 2009

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது





பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது

யாரு நம்ம இங்கு தடுக்குறது...

ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ!


ந்த பாட்டு வரிய படிச்சதுமே இது அந்த படம் தான்னு கண்டுப்புடிச்சி இருப்பிங்க. இருந்தாலும் கடமைக்குச் சொல்லிக்கிறேன். ஆமா, குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்.


நேத்திக்குத்தான் பார்த்தேன், தியேட்டர்க்கு எல்லாம் போகல. வீட்டுலேயே, திருட்டு டிவிடியிலத்தான்.

படம் தொடக்கத்திலேயே ரொம்ப பில்டப்பு போடுறாங்க. ஏதோ அசம்பாவிதம் நடந்திட்ட மாதிரியும், ஊரே அழுதுட்டு இருக்கிற மாதிரியும் காட்டுறாங்க. எழவு வீட்டுல பேசிக்கிற மாதிரி சில வசங்கள் ஓட, நமக்கு ஓரளவு ஊகிக்க முடிஞ்சிடுது. காதல் தோல்வி, இல்ல சாதி கலவரம். கிராமத்துக் கதைன்னா வேறென்ன புதுசா யோசிச்சிடப் போறாங்க?

கடந்த காலத்துல என்னதான் நடந்திருக்கும் என்பதை நாம யோசிக்கிறதுக்குள்ளாகவே, ஒரு நண்பன் மூலமா, அவன் பழச அசைப் போடுவதாய் நமக்கு கதைய சொல்றாங்க.

குசேலன் (ராமகிருஷ்ணா)– துளசி (தக்சனா). இவங்க ரெண்டு பேரும் தான் கதையில வர்ற காதலர்கள். குசேலன் அசப்புல பாண்டியராஜன ஞாபகப் படுத்துறதாலேயே என்னவோ, நம்ம பாண்டியராஜனோட “வந்தனம், வந்தனம்” பாட்டோட அவருக்கு அறிமுகம் தராங்க. துளசி அப்படியே சினேகாவையும் ஷ்ரேயாவையும் கலந்து செஞ்ச கலவை.

சரி கதைக்குப் போகலாம்

குசேலனுக்கு ஓர் அம்மா. அப்பா யாரு, இருக்காறா, இல்லையான்னு சரியா சொல்லல, அது முக்கியமாவும் தெரியல. ஊர்ல சதா லொட லொடன்னு ஏதாச்சும் வம்பு பண்ணுற செமி-வில்லன் கேரக்டர் அம்மாவுக்கு.

துளசிக்கு அம்மா அப்பா இருந்தும் இல்லாத நிலை, வயதான பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறாள். பாட்டிக்கு இந்த வயசுலத்தான் வாழ்வு வந்திருக்கு, செண்டிமெண்டல்ல செம்மையா கலக்குறாங்க. இந்த வயசுல கோடம்பாக்கத்துல ஒரு ரவுண்டு வந்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லை.



குசேலன் படிக்கும் பள்ளிக்குப் புதிதாய் சேர்கிறாள் துளசி. ஆண் நண்பர்களோடு சகஜமாய் பழகுபவள். உன்பெயர் என்ன என ஒருவன் வழிந்து கேட்கும்போது, தயக்கமோ அல்லது (பெண்களுக்கே உரிய) பந்தா/திமிரு/நாணம் இல்லாமல் ‘தொளசி’ என்று சொல்லிவிட்டு லேசாக புன்னகை காயாமல் பார்ப்பதில் பளிச்சென்று அவளது கதாப்பாத்திரத்தைச் சித்தரிக்கிறார்கள். படிப்பில் கெட்டி, விளையாட்டிலும்.

குசேலன், நம்ம ஹீரோ, படிப்பில மந்தம். பிட்டு அடிச்சி பாஸ் பன்ற கேஸ். ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன், என்று குதூகலித்து ஓடி வரும் குசேலனை, அம்மா கேட்கிறார் “காப்பி அடிச்சி தானே ராசா பாஸ் பண்ணே”ன்னு. இந்த கிண்டலுக்குப் பிறகு இயக்குனர் ராஜமோகனின் பெயர் உதயமாகுது.
ஒருதலையாக துளசியைக் காதலித்து பின் அவளைச் சம்மதிக்க வைப்பது சுவாரசியம். காதலிக்கும் போது இவங்களும் அவங்க கடமைக்கு நிலாவுக்குப் புதிய அர்த்தம் ஒன்னு சொல்லுறாங்க. காதலியத் தேடித்தான் நிலா பூமிய சுத்தி வருவதாய்.

முதல் பாதி படு சுவாரசியமா ஓடுது. பசுமையாய், இளமையாய், துள்ளலாய், நிதர்சனமாய், யதார்த்தமாய். இரண்டாம் பாதி அழுகை, கொடுமை, அசிங்கம் என செம்ம ஜவ்வு.

பட்டணத்தில் தினத்திருடனுக்கு வாக்கப் படுகிறாள் துளசி, என்று கதையில் திருப்பம். அங்கு அவள் படும் சங்கடங்கள் கணவனால் ஏற்படும் நிந்தனைகள் எல்லாம் கடுப்பு. விசயம் அறிந்த குசேலன், தேவதாசாய் மாறுகிறான். ‘ஆட்டோகிராப்’ சேரன், ‘காதல்’ பரத், ‘7ஜீ’ ரவிகிருஷ்ணா - இப்படி ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். சிறையில் கணவன் அகப்பட்டதும், துளசி கிராமத்துக்கே வந்து விடுகிறாள். அவளை ஏக்கத்தோடு காண ஓடி வரும் குசேலனைப் பார்க்க மறுக்கிறாள். அப்போது கூட அவளது மனப்பாட்டை சரியாக சொல்லவில்லை.



ஒரு கட்டதில், “அவன் செத்திருந்தாலும் என்ன பார்க்க வந்துருக்கனும், பாட்டி” என்று குமுறுவது அவளின் பக்குவப்படாத குழந்தை மனதைச் சித்தரிக்கிறது.

துளசியின் கணவனை வெளியே மீட்டு வர குசேலன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தியாகி காதலனின் வழக்கமான சினிமாத்தனம். Kira இவரு ரொம்ம்ம்ம்ப நல்லவராம்.

நாய் வாலு சும்மா இருக்குமா? வெளியே வந்ததுமே கணவன் ஒரு கொலை செஞ்சிடுறாரு. குசேலன் அதை தான் செஞ்சதா பலிய ஏத்துக்கிறாரு. ஊர் மக்கள் குசேலனை அடியா அடிச்சு துவைச்சி எடுத்துடுறாங்க, அப்புறமா போலிஸ் கூட்டிட்டு போகுது.

குசேலனின் இந்த தியாகத்தினால், எங்கே தனக்கு அவன் மீது காதல் கூடிவிடுமோ என்ற அச்சத்தில், கணவனைக் காட்டிக் கொடுக்க ஓடுகிறாள், துளசி. வாகனம் மோதி சாகிறாள்; குசேலன் போலிஸ் வண்டியிலிருந்து அதைப் பாஎத்துக் கொண்டே துவைத்த துணியாய் துவண்டு மாய்கிறான். இப்படி கதை முடிகிறது.

கதை புதுசு இல்லைன்னாலும், முதற் பாதி அமைந்த விதம் நம்மை கௌவி இழுக்குது. ராமகிருஷ்ணா ஆட்டத்திலும் நடிப்பிலும் டப்பிங்லயும் வெளுத்து கட்டுறாரு. ஹீரோயிஸம் அவ்வளவா தெரியல. தக்ஷ்னாவும் நல்லாவே பண்ணிருக்காங்க. அழுகைய குறைச்சிருக்கலாம், சரி அவங்க என்ன பண்ணுவாங்க, எல்லாம் இயக்குனர் சொல்ற மாதிரி தானே செய்யனும். அழுகையின் உச்சத்துக்கு போய் பின் சந்தோசத்த முகத்தில் கொண்டுவரணும். அந்த கட்டத்துல கொஞ்சம் சிரமம் பட்டிருக்காங்கன்னு நல்லாவே தெரியுது. யாருக்கும் ஒப்பனை அதிகமா இல்லை.

குசேலன் துளசியை விட சில செண்டிமீட்டர் குள்ளம் தான், ஆனால் இதை ஆசியமாகக் கூட சுட்டிக் காட்டலை. (ஏன், சூர்யா கூட சிம்ரன விட குள்ளமா தானே இருந்தாரு, ‘ஏங்கினேன் ஏங்கினேன்’ பாட்டுக்கு துரத்தி துரத்தி டூயட் பாடுலயா! ஹிஹிஹி...)

இரண்டாம் பாதியில் என்ட்ரீ ஆகிற துளசியின் கணவரும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குறார். அவரோட அக்கா பாகம் கொஞ்சம் நெருடலா இருக்கு

படத்தின் இசை, யுவனின் வழக்கமான ரகம் தான். “சின்னஞ் சிருசுக மனசுக்குள்” பாட்டு மனச அள்ளுது. பருத்தி வீரன் படப் பாடலை ஞாபகப் படுத்துது.

“கடலோரம் ஒரு ஊரு” என்ற பாட்டு ஆடியோவில் ரெண்டு பேரு தனித்தனியா பாடி இருந்தாங்க. யுவன் பீலிங் பிச்சிக்கிற அளவுக்குப் பாடி இருப்பாரு. சரண் ரொம்ப கூலா பாடி இருப்பாரு, இதுல எது திரை ஏறும் என்ற கேள்வி இருந்துக்கிட்டே இருந்திச்சு. ரொம்ப சாமர்த்தியமா, முதல் பாதி பாட்டு யுவன் குரல்லயும் ரெண்டாவது பாதி சரண் குரல்லயும் போட்டிருந்தாங்க.

கனவு பாடலகள் இல்லாததும் கவர்ச்சி இல்லாததும் ஆரோக்கியமான விசயங்கள். ரெட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் அதைக் கொச்சையாக தராத வரை பாராட்டலாம். காதலர்கள் முத்தம் பரிமாறிக் கொள்வதை மேகம் நிலவை மூடுவதைக் கொண்டு உவமானம் செய்திருப்பது கவிதை. (இது ஏற்கனவே வேற படங்கள்ல வந்திருக்கான்னு தெரியல)

குசேலனைச் ‘கொச்சி’ என்றும் துளசியைத் ‘தொளசி’ என்றும் அழைப்பதும், ஏதோ பகத்து வீட்டில் நடப்பதைப் போன்ற உள்வாங்கலைக் கொண்டுவருகிறது.


அதென்னவோ, கடைசியில காதலர்களைக் கொன்னுட்டா படம் வெற்றி அடைஞ்சிடும் என்ற எண்பதுகளின் senti'mental' formula இந்தப் படத்திலும் ஆளப்பட்டிருப்பது வருத்தம் தான். அண்மையில் வந்த வெண்ணிலா கபடிகுழு, பட்டாளம் போன்றவையும் பட இறுதியில் ஒரு பிரதான கதாப்பாத்திரத்தைக் காவல் கொடுத்திருக்கிறது இங்கே குறிப்பிட வேண்டிய விசயம்.


‘காதலர்கள் கொண்டாடும்’ கு.பூவும் கொ.புறாவும் அல்ல, காதலர்களைக் கொன்றாடும் ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’