நீ
பாறையாய் பார்ப்பாரற்று கிடந்தேன்
என்னில் சிற்பம் செதுக்கினாய் நீ
தண்ணீராய்த் தவழ்ந்திருந்தேன்
மின்சாரம் கொணர்ந்தாய் நீ
பஞ்சாய் பறந்துத் திரிந்தேன்
ஆடையாய் நெய்தாய் நீ
சுண்ணாம்பாய் மதிப்பற்று கிடந்தேன்
என்னை முத்தாக்கி மெருகூட்டினாய் நீ
மணிகளாய்ச் சிதறி கிடந்தேன்
மாலையாய்த் தொடுத்தாய் நீ
கரிமம் என்று நகைத்தனர் பலர்
அதில் வைரத்தை ஊற வைத்தாய் நீ
சொற்களாய் மட்டும் இருந்தேன்
கவிதையாய் அடுக்கினாய் நீ
என்னுள் எனைத்
தேட வைத்தாய் நீ
தேடுகிறேன்
என் தேடலின் இறுதி வரை
காத்திருப்பாயா நீ...
என்னில் சிற்பம் செதுக்கினாய் நீ
தண்ணீராய்த் தவழ்ந்திருந்தேன்
மின்சாரம் கொணர்ந்தாய் நீ
பஞ்சாய் பறந்துத் திரிந்தேன்
ஆடையாய் நெய்தாய் நீ
சுண்ணாம்பாய் மதிப்பற்று கிடந்தேன்
என்னை முத்தாக்கி மெருகூட்டினாய் நீ
மணிகளாய்ச் சிதறி கிடந்தேன்
மாலையாய்த் தொடுத்தாய் நீ
கரிமம் என்று நகைத்தனர் பலர்
அதில் வைரத்தை ஊற வைத்தாய் நீ
சொற்களாய் மட்டும் இருந்தேன்
கவிதையாய் அடுக்கினாய் நீ
என்னுள் எனைத்
தேட வைத்தாய் நீ
தேடுகிறேன்
என் தேடலின் இறுதி வரை
காத்திருப்பாயா நீ...
