பக்கங்கள்

ஞாயிறு, 23 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (3)

வினாக்களோடு சில கனாக்கள் (3)

மைதியான, வெளிச்சமான ஓர் இடத்தை தேடி அங்கே அமர்ந்தேன். என் புத்தகப்பையில் இருந்து சில விரிவுரை குறிப்புகளை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு சில தாட்கள் மட்டுமே படிக்க முடிந்தது, அவளை நெருங்கப் போகும் இன்பத் தருணங்கள் அவ்வப்போது கண் முன் வந்து மறைந்தன.

எழில்விழியோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம், நட்பு, இருதலை காதல் (அவளது குற்றச்சாட்டு - அவளிடமிருந்து நான் எதிர்பார்த்தது வெறும் உடல் இச்சையாம்), மோதல், மீண்டும் காதல், மீண்டும் மோதல்.... இப்படி பல பரிமாணங்களைக் கடந்து இறுதியாக மீண்டும் ‘நட்பு’ என்று சங்கிலி பூர்த்தியாகி உள்ளது. வெறும் நான்கே ஆண்டுகளில் இத்துணையும். எல்லாம் இணைய அளவே, இதுவரை நேரில் கண்டு பேசியதெல்லாம் இல்லை. தொலைபேசி, குறுந்தகவல், இணைய அரட்டை இவ்வாறு தான் எங்கள் உறவு இந்நாள் வரை நீடித்திருந்தது. ஆனாலும், புகைப்படங்களிலிலும் வலைக்காட்சியிலும் (வெப்கேம்) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதுண்டு.

பிற்காலத்தில், என் காதலை நிராகரித்து விட்டு, அவள் இன்னொருவனிடம் காதல் பூண்டதை என்னால் அப்போது ஏற்று கொள்ள முடியவில்லை. அவளைக் குற்றம் சொல்வதா, என்னை வைவதா அல்லது சூழ்நிலையைத் தூற்றுவதா? தெரியவில்லை. எனக்கு எந்த இழப்பும் இல்லையே என்று சொல்லி பல முறை என் மனசாட்சியையே ஏமாற்றிக் கொண்டேன். துரோகி நான், மனசாட்சியை ஏமாற்றியதால். சில இரவுகள் உள்ளுக்குள்ளே புளுங்கி உள்ளேன். கோழை நான், புளுங்கியதால். யாரிடம் சொல்லி அழ முடியும்? காலப் போக்கில் அவளது முடிவு அனைவரது நன்மைக்கே என உண்மையாக சமாதானமானேன். அவளுக்கு ஏற்ற துணையோடு வாழட்டும் என வழி விட்டு விலகி நின்றேன். ஒரு முட்டாள் தியாகி நான், காதலை விட்டுக் கொடுத்ததால். கிட்டாதாயின் வெட்டென மற என சொல்வார்கள்; காதலில் அது எத்தகைய சாத்தியம்? நானறியேன்.

சென்ற வாரம், சிங்கையில் ஒரு வேலை காலி இருப்பதாக இணையத்தில் விளம்பரம் பார்த்தேன், அந்த தொழிற்சாலையைப் பற்றி யாரிடம் விசாரிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது அங்கு வசிக்கும் எழில்விழியின் ஞாபகம் வந்தது. அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நல்ல உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.

அதே இரவு, வெளியூர் அழைப்பு வந்தது என் கைத்தொலைப்பேசிக்கு. திரையில் எண் காட்டப்படவில்லை. யாராக இருக்கும்? பாதி தூக்கத்திலே பேசுகிறேன், ஆம் அது அவளேதான். என் தேவதை. மன்னிக்க, எனது முன்னாள் தேவதை.

“ஹலோ மறவன்” “ஆ…ம், ஹலோ”

“எப்படி இருக்கே”

“நல்லாருக்கேன், நீ…?”

“ஆம், எஸ்.எம்.எஸ்க்கு ரிப்ளை அனுப்பினேன், பார்க்கலையா?”

“இல்ல, தூங்கிட்டேன்”

“அடுத்த வாரம் பினாங்கு வரேன், என்னுடைய தேர்வு ஒன்னு அங்க எழுத வேண்டி இருக்கு. பினாங்குல எனக்கு என்ன இடம் தெரியும், நீ இருக்கேன்ற நம்பிக்கையில தான் வரேன்” மோதல் காலத்தில் அவளை இனி வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்றெல்லாம் (மனதுக்குள்) சபதம் போட்டுள்ளேன்.

“என்றைக்கு?”

“வியாழன், வெள்ளி, சனி மூனு நாள்”

வார இறுதியில் வெற்று நேரம் இருக்கும், ஆனால் இந்த சனிக்கிழமை பார்த்து கல்லூரியில் சொற்பொழிவு இருக்கிறதே? முடியாது என்றால் என்ன நினைப்பாளோ? இவ்வளவு பக்கம் வந்தும் போய் பார்க்கவில்லை எனில் அது தப்பு மாதிரி தெரிந்தது. உள்ளூர அவளைப் பார்க்க வேண்டும் என்ற தசையாட்டம் இல்லாமல் இல்லை. நிலைமையை எடுத்துரைத்தேன், அவள் சமாதானமாகவில்லை. உரிமையாக வர வேண்டி உத்தரவிட்டாள். போதாக் குறைக்கு ஒரு பழமொழி சொன்னாள் ஆங்கிலத்தில், அதற்கு ஈடாக தமிழில் -

“மனம் உண்டானால் மார்க்கமுண்டு”

“எல்லாம் நேரம்டா சாமி” நான்!


(கனாக்கள் தொடரும்)

4 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">

*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்

*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்

மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.

இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

தம்பி... விதி வழியது.... :))) சொந்த கதை மாறி இருக்கு...

A N A N T H E N சொன்னது…

சுப.நற்குணன் - மலேசியா @ எழுதியாச்சி, பதிவை எட்டிப் பார்த்தமைக்கு நன்றி

A N A N T H E N சொன்னது…

//சொந்த கதை மாறி இருக்கு...//
உங்க சொந்த கதையாண்ணா? சொல்லவே இல்லையே... பதிப்புரிமை கேட்டு வம்பு பண்ணக் கூடாது