பக்கங்கள்

வெள்ளி, 2 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (41-60)


நினைவை எட்டிய முதல்நூறு (41-60)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

பாட்டு, இசை நாம் பிறந்தது தொட்டு கூடவே பயணிக்கும் ஒரு சொத்து. தமிழை மூன்று வகையாகப் பிரித்த போது கூட இசைக்கு ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இசையில் மூழ்கும்போது நாம் நம்மை மறந்து போகின்ற தருணங்களும் உள்ளன. இசையைக் கொண்டு மருத்துவம் கூட செய்யப்படுகிறது.

இதெல்லாம் ஏன் திடீரென சொல்லிக்கிட்டு இருக்கேன்னு கேட்கலாம் நீங்க. போன ரெண்டு நாளா எனக்குப் புடிச்ச பாட்டு வரிய போட்டுக்கிட்டு வரேன், அதோட தொடர்ச்சிதான் இன்னிக்கும்.

உடனே ஞாபகத்துக்கு வந்த முதல் நூறு தமிழ்ப்பாட்டு வரிகள் கீழே:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
41. கடவுள் இருப்பது தூரமடா, உன் காதல் இருப்பது அண்மையடா... நீ கடவுளை அடைவது சாத்தியமா, இல்லை காதலை அடைவது சாத்தியமா?

42. காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ, மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ!

43. தலை சாய்த்து பார்த்தாயே, தடுமாறி போனேனே...

44. வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி... ~~~ நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி

45. உனையன்றி வேறொரு நினைவில்லை, இனி இந்த ஊனுயிர் எனதில்லை, தடையில்லை சாவிலுமே உன்னோடு வர...

46. என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே, இள வேனில் காற்றின் வெப்பம் தாக்க நின்றேனே

47. சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும், புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்

48. கடல் மீதொரு துளி வீழ்ந்ததே, அதைத் தேடி தேடி பார்த்தேன்

49. கடலுக்கு மேல் ஒரு மழைத்துளி வந்து விழுந்ததே, உப்பென மாறுமா... இல்லை முத்தென மாறுமா? ~~~ தடுப்பதைப் போல நடித்திடும்போதும் தத்தித்தாவி கண்கள் ஓடும், அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையைத் தாண்டி உள்ளம் கேட்கும் இது சரியா....

50. தருகின்ற பொருளாய் காதல் இல்லை, தந்தாலே காதல் - காதல் இல்லை

51. நீ என்னைப் பிரிந்ததாய் யார் சொன்னது? என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது...

52. இனியொரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா, அதுவரை என்னைக் காற்றோடு சேர்த்திடவா

53. காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம், நரகம் சுகம் அல்லவா?

54. மாமன் பொண்ணே மச்சம் பாத்து நாளாச்சு, உன் மச்சானுக்கு மயிலப்பசுவு தோதாச்சு

55. அடி சூடான மழையே உடம்பு நனைஞ்சிக்கலாமா? கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா?

56. விடவேண்டும் அச்சத்தை, தொட வேண்டும் உச்சத்தை, அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை

57. அன்பே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி, சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி

58. யாரோ பெறுவார் பிள்ளை, இவரு தருவார் ‘பில்’-லை

59. உப்பு கடல வாங்கி தின்போம், தப்பா கடல போட மாட்டோம்

60. அவ தங்கச்சி பாப்பாக்கு முட்டாயி வாங்கியே தந்தேனே, முட்டாய் வாங்கி தந்தேனே, மாமு முட்டாளா ஆனேனே...

(எஞ்சியவை பின்னாளில்)

கருத்துகள் இல்லை: